இலங்கை
இளவாலையில் ஆணின் சடலம் மீட்பு!
இளவாலை, சேந்தாங்குளம் கடற்கரைப் பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (28) காலை கரை ஒதுங்கியது.
மீனவர்கள் கடலுக்கு சென்றவேளை குறித்த சடலம் இருப்பது அவதானிக்கப்பட்டு இளவாலை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டது.
சடலம் யாரென அடையாளம் காணப்படாத நிலையில் இளவாலை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
You must be logged in to post a comment Login