இலங்கை

சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு கடன்

Published

on

ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவியின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் சிறு மற்றும் நடுத்தர நிறுவன கடன் திட்டங்கள் குறித்த விசேட அறிவிப்பை நிதியமைச்சு வெளியிட்டுள்ளது.

விவசாயம் மற்றும் சுற்றுலாத் துறைகள் மற்றும் ஏற்றுமதி சார்ந்த துறைகள் தொடர்பான உற்பத்தியில் ஈடுபட்டுள்ள குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் செயல்பாட்டு மூலதனத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்குத் தேவையான ஆதரவை இது வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடன் திட்டத்தின் மூலம் செயல்பாட்டு மூலதனக் கடன்களைப் பெற முடியும் என்பதுடன் ஒரு நிறுவனத்தால் பெறக்கூடிய அதிகபட்ச கடன் தொகை ரூ. 10 மில்லியன் ரூபாவாகும்.

ஆறு (06) மாதங்கள் அதிகபட்ச கடன் சலுகைக் காலத்துடன் அதிகபட்சம் மூன்று ஆண்டுகளில் கடன் தொகையை செலுத்தலாம்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version