இலங்கை

கப்ராலுக்கு எதிரான தடை நீடிப்பு!

Published

on

நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர் என்று குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட தனிப்பட்ட முறைப்பாடு தொடர்பில், மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் நவம்பர் மாதம் 24ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் ஹர்ஷன கெகுனாவெல, இன்று (26) கட்டளை பிறப்பித்தார்.

முன்னாள் ஆளுநருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கட்டிருந்த நிலையில், கடந்தத அமர்வில் அவர் மன்றில் ஆஜராகாதமையால், ஒக்டோபர் 26ஆம் திகதி (இன்று) மன்றில் ஆஜராகுமாறு மீண்டும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் இன்றையதினம் மன்றில் ஆஜராகியிருந்த முன்னாள் ஆளுநரை 10 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்குமாறும் நீதவான் உத்தரவிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version