இலங்கை

இலங்கையர் ஒருவர் கசினோவிற்குள் நுழைவதற்கு 200 டொலர்!

Published

on

கசினோ நிலையங்களுக்கான வருடாந்த வரி 20 கோடியில் இருந்து 50 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய அறிக்கையொன்றில் தெரிவித்துள்ளார்.

புதிய திருத்தங்களினால் கசினோக்களுக்கு அதிக பதிவுக் கட்டணமும், இலங்கையர் ஒருவர் கசினோவிற்குள் நுழைவதற்கு 200 டொலர் கட்டணமும் விதிக்கப்படும் என தெரிவித்தார்.

மற்ற பந்தயம் மற்றும் விளையாட்டுகளுக்கான வரிகள் குறைந்தது பின்வருமாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.

நேரடி பந்தய மையங்களுக்கு,
1. ஆண்டு வரியை ரூ.6 லட்சத்தில் இருந்து குறைந்தது ரூ.10 லட்சமாக உயர்த்துதல்.
2. 10% விற்று முதல் வரியை குறைந்தபட்சம் 15% ஆக உயர்த்துதல்.
3) பந்தய துணை முகவர்களுக்கான வருடாந்த வரி 4 மில்லியன் ரூபாவிலிருந்து குறைந்தது 5 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு.
5) நேரடி அல்லாத பந்தய சந்தைகளுக்கு ஆண்டு வரி ரூ.50,000ல் இருந்து ரூ.75,000 ஆக உயர்வு.
இவை அனைத்திற்கும் பிறகு, அந்த வணிகங்களின் வருமானம் அல்லது லாபத்தின் மீது 40% வருமான வரி விதிக்கப்படுகிறது.

இது தவிர, மதுபானம் மற்றும் புகையிலை மீதான வரிகள் பின்வருமாறு.

மது போத்தலுக்கு குறைந்தபட்சம் 75% வரி விதிக்கப்படுகிறது.

சிகரெட்டுகளுக்கு கிட்டத்தட்ட 85% வரி விதிக்கப்பட்டுள்ளது.

இறுதியில், அந்த நிறுவனங்களின் லாபத்தில் இருந்து 40% வருமான வரி விதிக்கப்படுகிறது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version