அரசியல்

விசாரணைகளுக்கு இடையூறு! – கூட்டமைப்பு எம்.பிக்கு எதிராக முறைப்பாடு

Published

on

காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் அம்பாறை மாவட்டத்தில் காணாமலாக்கப்பட்டோருக்கான அலுவலகம் விசாரணைகளை முன்னெடுத்தபோது அங்கு வந்திருந்த, கூட்டமைப்பு எம்.பி கோவிந்தன் கருணாகரன் விசாரணைகளுக்கு இடையூறு ஏற்படுத்தி அதிகாரிகளை அச்சுறுத்தியதாக நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்தார்.

இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

காணாமலாக்கப்பட்டோருக்கு நீதி கிடைக்க வேண்டுமென ஊடகங்கள் முன்பாகக் கூறும் கூட்டமைப்பினர், காணாமலாக்கப்பட்டோர் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்போது அதனை மூழ்கடிக்கப் பார்ப்பதாகக் குற்றஞ்சுமத்தினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version