அரசியல்

ரணில் முன்பு போல இல்லை! – கூறுகிறார் நாமல்

Published

on

‘பொடி மைனா’ என்று தன்னை அழைப்பதற்கு மகிழ்ச்சியடைவதாக தெரிவித்த ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கொண்டு வந்த இணையத்தைப் பயன்படுத்தி அவரே தாக்கப்படுகிறார் என்று தெரிவித்தார்.

இணையத்தில் மக்கள், மஹிந்த ராஜபக்ஷவை ‘நாக்கி மைனா’ என்றும் தன்னை ‘பொடி மைனா’ என்றும் விமர்சிப்பதாக குறிப்பிட்ட நாமல் எம்.பி, தன்னை மஹிந்த ராஜபக்ஷவின் மகனாக மக்கள் ஏற்றுக்கொண்டமையால் தான் மகிழ்ச்சி அடைவதாக சுட்டிக்காட்டினார்.

2005ஆம் ஆண்டு 5 சதவீதம் பேருக்கு மட்டுமே இணையம் இருந்ததாகவும் மஹிந்த அறிமுகப்படுத்திய இணையத்தை இன்று மக்கள் பயன்படுத்தி அவரை ‘நாக்கி மைனா’ என்று அழைக்கின்றனர் என்றார்.

ரணில் விக்கிரமசிங்க புனர்வாழ்வளிக்கப்பட்டதாகக் கூறப்பட்டதையடுத்து, ஐக்கிய தேசியக் கட்சியினர் குழப்பமடைந்தாக குறிப்பிட்ட நாமல் எம்.பி, அது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மை என குறிப்பிட்டார்.

ரணில் விக்கிரமசிங்க முன்பு போல் இப்போது மேற்குலகுக்கு விசுவாசமாக இல்லை என்றும் அவர் தூதரகங்களின் விருப்பத்திற்கு ஏற்ப செயல்படவில்லை என்றும் தெரிவித்தார்.

கோட்டாபய ராஜபக்ஷ, மனித உரிமைகளை மதித்த போதிலும், ரணில் விக்கிரமசிங்க காலி முகத்திடலை துடைத்தெறிந்தாகவும் அவர் மனித உரிமைகள் பற்றி இப்போது பேசவில்லை என்றும் குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version