அரசியல்

பிரச்சினைகளை தீர்க்க ஒன்றிணையுங்கள்!

Published

on

பாரம்பரிய கட்சி அரசியலை புறந்தள்ளி, மக்களின் உணவுப் பிரச்சினைகளை தீர்க்க அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.

அம்பாறையில் இன்று (15) முற்பகல் இடம்பெற்ற உணவு உற்பத்தியை உறுதிப்படுத்துவதற்காக கிராமிய பொருளாதார மத்திய நிலையங்களை வலுவூட்டுவதற்கான பல்துறை கூட்டுப் பொறிமுறையில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

2023 ஆம் ஆண்டு ஏற்படக்கூடிய உலகளாவிய உணவு நெருக்கடியை எதிர்கொள்வதற்காக கட்சி அரசியலிலிருந்து விலகி தேசிய உணவு உற்பத்தித் திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் என்று ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version