இந்தியா

அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் கைது!

Published

on

இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அத்துமீறி மீன்பிடித்த இலங்கை மீனவர்கள் இந்திய கடலோர பாதுகாப்பு படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடியில் இருந்து 150 கடல்மைல் தூரத்தில் மீன்பிடித்து கொண்டிருந்த 5 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் சென்ற படகினையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட 5 மீனவர்கள் இன்று இரவு தூத்துக்குடி தருவைகுளம் அல்லது நெல்லை மாவட்டம் கூடங்குளத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version