இந்தியா

இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இருமல் ரொனிக்கை குடித்த 66 குழந்தைகள் உயிரிழப்பு.

Published

on

மேற்கு ஆப்பிரிக்காவின் காம்பியா (Gambia) நாட்டில் 66 குழந்தைகள் இறந்தமைக்கு இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 4 இருமல் ரொனிக்குகள்தான் காரணம் என உலக சுகாதார நிறுவனம் குற்றம் சாட்டியுள்ளது.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் தயாரிக்கப்பட்டவை. ஹரியானாவின் சோனிபட் மெய்டென் நிறுவனத்தால் Maiden Pharmaceuticals Limited தயாரிக்கப்பட்ட இந்த 4 ரொனிக்குகளை குடித்ததால்தான் சிறுநீரக பாதிப்பு மற்றும் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சிறுநீர் கழிக்க இயலாமை, தலைவலியால் குழந்தைகளின மரணம் நிகழ்ந்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

இதுவரை 66 குழந்தைகள் இந்த ரொனிக்குகளை குடித்ததால் உயிரிழந்துள்ளனர். உலக சுகாதார அமைப்பான WHO விசாரணை நடத்தி வருகிறது. மேலும் உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய இந்த 4 மருந்துகள் தொடர்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்திருக்கிறது.

காம்பியாவில் மட்டும் இல்லாமல் வெளிநாடுகளிலும் இம்மருந்துகள் உயிராபத்துகளை ஏற்படுத்தி இருக்கலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. ஹரியானா நிறுவனம் தயாரித்த இந்த மருந்துகளில் அதிக எத்திலீன், எத்திலீன் கிளைக்கால் ஆகியவைதான் மரணத்துக்கு காரணமாக இருக்கக் கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து உலக சுகாதார நிறுவனம் விரைவில் விரிவான தகவல்களை வெளியிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

#worldnews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version