அரசியல்

காகத்துக்கும் யானைக்கும் திருமணம் முடிந்துவிட்டது! – சஜித்

Published

on

” நாட்டில் அடுத்து எந்த தேர்தல் நடத்தப்பட்டாலும் அதனை எதிர்கொள்வதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவே இருக்கின்றது.” – என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

” எமது நாட்டு மக்கள் ஜனாதிபதி (கோட்டா), பிரதமர் (மஹிந்த) ஆகியோரை விரட்டினர். காகத்தைக்கூட (பஸில்) விரட்டியடித்தனர். எனவே, தற்போது அமைந்துள்ள அரசாங்கமானது, மக்கள் ஆணைக்கு முரணானது.” – எனவும் சஜித் சுட்டிக்காட்டினார்.

மக்களுக்கு அஞ்சுவதால்தான், தேர்தல்களை நடத்துவதற்கு அரசாங்கம் நடுங்குகின்றது எனவும், பயங்கரவாத தடைச்சட்டம் உள்ளிட்ட சட்டங்களை பயன்படுத்தி மக்களை ஒடுக்குவதற்கு முயற்சிக்கின்றது எனவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அத்துடன், ‘காகம் – யானை’ கூட்டணியே தற்போது நாட்டை ஆள்கின்றது. அதாவது, காகத்துக்கும் (மொட்டு கட்சி), யானைக்கும் (ஐக்கிய தேசியக் கட்சி) அரசியல் ரீதியில் திருமணம் முடிந்துவிட்டது.” – எனவும் சஜித் சாடினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version