இலங்கை

முகத்துவாரம் பகுதியில் தீ! – 80 வீடுகள் சேதம்

Published

on

கொழும்பு 15 , முகத்துவாரம், கஜீமா தோட்டத்தில் நேற்றிரவு ஏற்பட்ட தீயால் 80 வீடுகளுக்கு சேதமடைந்துள்ளன.

நேற்றிரவு 7.30 மணியளவில் குடியிருப்பில் பரவிய தீ, கொழும்பு தீயணைப்பு பிரிவினரால் , கடும் பிரயத்தனத்துக்கு மத்தியில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டது.

தீ பரவியமைக்கான காரணத்தை கண்டறிவதற்காக சம்பவ இடத்தில் இன்று(28) இரசாயன பகுப்பாய்வு முன்னெடுக்கப்படவுள்ளது.

தீக்கிரையான வீடுகளில் வசித்தவர்கள் தற்போது மோதர உயன சனசமூக நிலையம் மற்றும் விகாரையில் தற்காலிகமாக தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version