அரசியல்

ஜெனிவா பறந்தது இலங்கைக் குழு

Published

on

சர்வதேச மட்டத்தில் இராஜதந்திரச் சமர் எனக் கருதப்படுகின்றது ஐ.நா. மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இலங்கைக்குழு, ஜெனிவா சென்றடைந்துள்ளது.

நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச, வௌிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி உள்ளிட்ட குழுவினரே ஜெனிவா சென்றுள்ளது.

சட்ட மா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலும் இந்தக் குழுவில் உள்ளடங்கியுள்ளார்.

எதிர்வரும் 12ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்திற்கு முன்னதாக, உறுப்பு நாடுகளுடனும், அமைப்புகளுடனும் பேச்சு நடத்துவதற்கு இலங்கை தரப்பு திட்டமிட்டுள்ளது.

அத்துடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் தேசிய மக்கள் முன்னணி உள்ளிட்ட வடக்கு, கிழக்கில் செயற்படும் கட்சி மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஜெனிவா செல்லவுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version