அரசியல்

புதிய கூட்டணியால் பாதிப்புகள் இல்லை!

Published

on

புதிய கட்சிகள் மற்றும் கூட்டணிகளின் உதயத்தால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எவ்வித பாதிப்பும் இல்லை. எமது பயணம் தொடரும் – என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு.

” கட்சி ஆரம்பிப்பதென்பது இலகுவான விடயம். அதனை யாரும் செய்யலாம். ஆனால் கட்சிக்கான பரந்தப்பட்ட கட்டமைப்பை உருவாக்குவதே சவாலுக்குரிய விடயம். அந்த கட்டமைப்பை எமது மொட்டு கட்சி செய்துள்ளது.

புதிய கட்சியை – கூட்டணியை ஆரம்பிப்பவர்கள் தேசிய தேர்தலொன்றின்போது பிரதான கட்சிகளுடன் கூட்டணி வைத்துதான் ஆகவேண்டும். எனவே, தவறான வழியில் சென்றவர்கள் மீள வரலாம். எமது சலூன் கதவு திறந்தே உள்ளது.” – என்றார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version