அரசியல்
களத்தில் மீண்டும் மஹிந்த
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற கட்சி செயற்பாட்டாளர்களுக்கான கூட்டத்தில் முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவும் பங்கேற்றார்.
மே – 09 ஆம் திகதி சம்பவத்தின் பின்னர், பிரதமர் பதவியை துறந்த மஹிந்த ராஜபக்ச, நாடாளுமன்ற அமர்வுகளில் பங்கேற்றாலும் செயற்பாட்டு அரசியலில் இறங்கவில்லை. கட்சி தலைமையகமும் செல்லவில்லை. கூட்டங்களிலும் பங்கேற்கவில்லை.
இந்நிலையிலேயே நீண்ட நாட்களுக்கு பிறகு, அரசியல் கூட்டமொன்றில் மஹிந்த ராஜபக்ச பங்கேற்றுள்ளார்.
You must be logged in to post a comment Login