அரசியல்

13 பேர் வெளியேற்றத்தால் பாதிப்பு இல்லை!

Published

on

” டலஸ் அழகப்பெரும, ஜி.எல். பீரிஸ் உள்ளிட்ட 13 எம்.பிக்கள் வெளியேறியிருந்தாலும், அதனால் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு எவ்வித தாக்கமும் ஏற்படாது.” – என்று நாடாளுமன்ற எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” எதிரணி பக்கம் சென்றவர்களில் தேசியப்பட்டியல் ஊடாக தெரிவானவர்களே அதிகம், அவர்களின் வெளியேற்றத்தால் கட்சிக்கு தாக்கம் இல்லை. தவிசாளர் எனக் கூறிக்கொள்ளும் பீரிஸ் ஓரங்கட்டப்பட்டுள்ளார்.

அவர் எமது கட்சி செயற்பாட்டில் பங்கேற்பதில்லை. விரைவில் கட்சி சம்மேளனம் நடைபெறும். அதன்போது இவர்கள் நீக்கப்படுவார்கள்.” – எனவும் எஸ்.பி. குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version