இலங்கை
கொடியிறக்கத்துடன் நிறைவுபெற்றது நல்லூர் மஹோற்சவம்
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவம் கொடியிறக்கத்துடன் இன்றையதினம் நிறைவுபெற்றது.
நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் ஒகஸ்ட் மாதம் இரண்டாம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
நல்லைக்கந்தனின் தீர்த்தோற்சவம் இன்று காலை இடம்பெற்ற நிலையில் மாலை கொடியிறக்க உற்சவம் இடம்பெற்று முருகப் பெருமான், வள்ளி,தெய்வானை, சண்டேஸ்வரர் ஆகியோர் எழுந்தருளி வலம்வந்தனர்.
நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்த பக்தர்கள் திரண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
இருபத்தைந்து நாள் கொண்ட மகோற்சவம் இன்று வெள்ளிக்கிழமை (26) மாலை கொடியிறக்கத்துடன் நிறைவடைந்த நிலையில் நாளை சனிக்கிழமை(27) மாலை பூங்காவனமும் ஞாயிற்றுக்கிழமை(28) வைரவர் உற்சவமும் இடமபெறவுள்ளது.
You must be logged in to post a comment Login