அரசியல்

கோட்டாவுக்கு பிரதமர் பதவி?

Published

on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதில் தமக்கு ஆட்சேபனை இல்லை எனவும் அவ்வாறானதொரு யோசனை முன்வைக்கப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்கப்படும் என்று ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் மேஜர் பிரதீப் உடுகொட தெரிவித்துள்ளார்.

” கோட்டாபய ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டுவர சிறந்த நிர்வாக தலைமைத்துவத்தை வழங்கியவர். அவருக்கு 69 லட்சம் பேர் வாக்களித்தனர்.

எனவே, அவர் நாட்டுக்கு வருவதற்கு எந்தத் தடையும் இல்லை. கோட்டாபய ராஜபக்ச இலங்கை திரும்புவதற்கான உரிமையை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் உறுதிப்படுத்தியுள்ளது.” – எனவும் அவர் குறிப்பிட்டார்.

மொட்டு கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version