அரசியல்

சர்வக்கட்சி அரசுக்கு சாத்தியம் குறைவு!

Published

on

” சர்வக்கட்சி அரசாங்கம் உதயமாவதற்கான சாத்தியம் குறைந்துவிட்டது.” – என்று தேசிய சுதந்தர முன்னணியின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.

சுயாதீன அணிகளுக்கிடையிலான விசேட கூட்டமொன்று கொழும்பில் நேற்றிரவு நடைபெற்றது. அச்சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே விமல் வீரவன்ச மேற்கண்டவாறு கூறினார்.

” நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலைமையை கருதியாவது, ஒன்றிணைந்து பயணிக்கும் மனநிலை நாட்டிலுள்ள அரசியல் கட்சிகளுக்கு இல்லை. ஜனாதிபதியும் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை. எனவே, சர்வக்கட்சி அரசு சாத்தியப்படாது. தற்போதைய அரசாங்கம், தொடர்ந்து பயணிக்கவே முயற்சிக்கின்றது.” – எனவும் விமல் குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version