அரசியல்

ஹிருணிக்காவிடம் 6 மணிநேர வாக்குமூலம்!

Published

on

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் ஹிருணிக்கா பிரேமசந்திரவிடம், சிஐடியினர் 6 மணிநேரத்துக்கு மேல் வாக்குமூலம் பதிவுசெய்துள்ளனர்.

இன்று முற்பகல் 11 மணியளவில் சிஐடி வந்த ஹிருணிக்காவிடம், மாலை 5 மணிவரை விசாரணை நடத்தப்பட்டுள்ளது.

நாட்டில் இடம்பெற்ற போராட்டங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட விடயங்கள் தொடர்பில் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கலாம்.

விசாரணை தொடர்பில் கருத்து வெளியிட்ட ஹிருணிக்கா,

” பாசிசவாதிகளிடமிருந்து நாட்டை காப்போம் எனும் தொனிப்பொருளின்கீழ் அடுத்த தேர்தலுக்கு மொட்டு கட்சி தயாராகிவருகின்றது. அதற்கான வழிமுறைககள் தற்போது தயாரிக்கப்படுகின்றது. அதன் ஓர் அங்கமே இந்த விசாரணை. ” – என்று குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version