இலங்கை

இலங்கை தொடர்பில் பிரிட்டன் விசேட திட்டம்!

Published

on

இலங்கை உள்ளிட்ட வளரும் நாடுகளில் ஆடை மற்றும் உணவு போன்ற நூற்றுக்கணக்கான பொருட்களுக்கான வரி குறைப்புகளை நீட்டிக்க பிரிட்டன் புதிய வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

இங்கிலாந்தின் ஜிஎஸ்பி வரி நிவாரண முறைக்கு பதிலாக இந்த புதிய திட்டம் 2023 ஆம் ஆண்டு நடைமுறைக்கு வரும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளின் வர்த்தகத் திட்டம் (DCTS) இலங்கையின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதன் மூலமும் வேலைவாய்ப்பை அதிகரிப்பதன் மூலமும் நன்மை பயக்கும் என்று நாட்டிற்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சாரா ஹல்டன் டுவிட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

80% க்கும் அதிகமான பொருட்களுக்கான வரியில்லா ஏற்றுமதியில் இருந்து இலங்கை தொடர்ந்து பயனடையும் என்றும் மேலும் 150 க்கும் மேற்பட்ட தயாரிப்புகள் மீதான வரிகளை நீக்குவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பிட்ட நேரங்களில் விதிக்கப்படும் வரிகளை எளிமையாக்குவதுடன், பிரிட்டனுக்கான இலங்கை ஏற்றுமதிகளுக்கு கூடுதல் மற்றும் எளிமையான அணுகலை வழங்கும் என்றும் அவர் மேலும் கூறினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version