இலங்கை

படகு மூலம் வெளிநாடு செல்ல முயற்சித்த 10 பேர் கைது!

Published

on

சட்டவிரோதமாக படகு மூலம் வெளிநாடு செல்ல முயற்சித்த 10 பேர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமன்னார் குருசபாடு கடற்பரப்பில் நேற்று இரவு இலங்கை கடற்படையினர் முன்னெடுத்த விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

குறித்த கடற்பகுதியில், கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படை ரோந்து கப்பலால் சந்தேகத்துக்கு இடமானமுறையில் பயணித்த டிங்கி படகு ஒன்று சுற்றிவளைக்கப்பட்டது.

அந்த டிங்கி படகில், நான்கு ஆண்கள், இரண்டு பெண்கள் மற்றும் 18 வயதுக்கு குறைவான நால்வர் மற்றும் டிங்கி படகுகளை இயக்கிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்டவர்கள் பேசாலை, உறுமலை, கிளிநொச்சி மற்றும் கந்தளாய் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக தலைமன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இது தொடர்பில் அறிக்கையொன்றை விடுத்துள்ள இலங்கை கடற்படை, பணம் சம்பாதிப்பதற்காக பாதுகாப்பற்ற கப்பல்களை பயன்படுத்தி கடத்தல்காரர்கள் ஏற்பாடு செய்துள்ள மனித கடத்தலில் சிக்கி, நாட்டிலிருந்து சட்டவிரோதமாக இடம்பெயர முயற்சிப்பது மற்றும் உயிரை பணயம் வைத்து சட்டத்தின் முன் தண்டிக்கப்படுவதை தவிர்க்குமாறு கடற்படை பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளது.

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version