இலங்கை

எரிபொருள் விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு!

Published

on

எரிபொருள் விலைகளில் எந்தவொரு மாற்றத்தினையும் ஏற்படுத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஒவ்வொரு மாதமும் முதலாம் மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலை திருத்தம் மேற்கொள்ளப்படுமென மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்திருந்தார்.

இதன்படி, எரிபொருள் விலை திருத்தம் நேற்று இரவு மேற்கொள்ளப்படுமென எதிர்பார்க்கப்பட்ட போதும், இந்த விடயம் தொடர்பில் எவ்வித அறிவிப்புகளும் விடுக்கப்படவில்லை.

எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் எரிபொருள்களின் விலைகளில் எவ்விதமான மாற்றங்களும் ஏற்படாது என்றும் சகல எரிபொருள் வகைகளுக்குமான விலைகள் அவ்வாறே பேணப்படும் என்றும் எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, ஒக்டேன் 92 பெட்ரோல் லீற்றர் 450 ரூபா, ஒக்டேன் 95 பெட்ரோல் லீற்றர் 540 ரூபா, ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 430 ரூபா, சுப்பர் டீசலின் விலை 510 ரூபா என்றடிப்படையில், விலைகள் தொடர்ந்து பேணப்படும்.

இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை மிகவும் குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. WTI தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 88 தசம் 42 அமெரிக்க டொலர்களாக காணப்படுகின்றது.அத்துடன், Brent தர மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 93 தசம் 91 அமெரிக்க டொலராகவும் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version