இலங்கை

முல்லைத்தீவில் சட்டவிரோத மீன்பிடி! – 6 படகுகளுடன் 8 மீனவர்கள் கைது!

Published

on

முல்லைத்தீவு மாவட்ட கடற்பரப்பில் ஒளிபாய்ச்சி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 6 படகும் 8 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

முல்லைத்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத கடற்தொழில் நடவடிக்கையில் மீனவர்கள் ஈடுபட்டு வருவதாக மீனவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் அதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் நீரியல்வளத்திணைக்கள அதிகாரிகள் நேற்று(15) இரவு ஈடுபடுடிருந்தனர்.

இதன்போது முல்லைத்தீவு கடலில் தடைசெய்யப்பட்ட கடற்தொழில் நடவடிக்கையில் ஒன்றான கடலுக்குள் ஒளிபாய்ச்சி மீன்பிடித்த குற்றச்சாட்டில் கொக்கிளாய் கடற்பரப்பில் மூன்று படகுகளும், மாத்தளன் கடற்பரப்பில் ஒரு படகும், வலைஞர்மடம் கடற்பகுதியில் இரண்டு படகுகளும் என மொத்தமாக 6 படகுகளுடன் 8 மீனவர்களும் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

கைதுசெய்யப்பட்ட நபர்களையும் சான்று பொருட்களையும் முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் கடற்தொழில் நீரியல்வளத் திணைக்களம் ஈடுபட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version