அரசியல்

இலங்கை வருகிறது இந்திய விமானம்!

Published

on

இந்திய கடற்படைக்கு சொந்தமான டோனியர்-228 கடல்சார் கண்காணிப்பு விமானம் இன்று இலங்கைக்கு வழங்கப்படவுள்ளது.

இந்திய சுதந்திரதினமான இன்று குறித்த விமானம் இலங்கைக்கு வழங்கப்படுவது சிறப்பாக காணப்படுகின்றது.

இலங்கைக்கு இதுபோன்ற 3 கண்காணிப்பு விமானங்களை இந்திய அரசு வழங்க உள்ளது, இதன்படி முதல் விமானம் இதுவாகும்.

இந்த விமானம் கையளிக்கப்பட்டதன் பின்னர் ஐந்து இந்திய தொழில்நுட்ப அதிகாரிகள் குழுவொன்று இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக கடந்த மார்ச் மாதம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version