அரசியல்

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம்! – இன்றுடன் 2000 நாட்கள்

Published

on

கடந்த 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி கிளிநொச்சி மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் இன்று 2,000 நாட்களை கடந்து செல்கின்றது.

இந்த நிலையில் கிளிநொச்சி – கந்தசாமி ஆலய முன்றலில் ஆரம்பிக்கும் போராட்டம் கிளிநொச்சி டிப்போ சந்தி வரை பேரணியாக செல்லவுள்ளது.

கடத்தப்பட்ட, இராணுவத்திடம் கையளிக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடி அவர்களுடைய உறவுகள் கடந்த 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவடைந்த காலம் முதல் தொடர்ச்சியாக கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version