இலங்கை
கொழும்பு பேராயருக்கு தொற்று!
கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு, கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
தொற்றுக்குள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு பெரிய பாதிப்புகள் எவையும் இல்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றியிருப்பதால், மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, ஏற்கெனவே திட்டமிட்டிருந்த சகல சந்திப்புகளையும் ஒத்திவைத்துள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login