அரசியல்

கோட்டாவுக்கு விசா! – இலங்கை அரசே கோரிக்கை என்கிறது தாய்லாந்து

Published

on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் 90 நாட்கள் தங்குவதற்கான அனுமதியை வழங்குமாறு, இலங்கை அரசே கோரிக்கை விடுத்ததென தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் Tanee Sangrat தனது ருவிட்டர் பதிவில்,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இதுவரை எவ்வித அரசியல் அடைக்கலம் கோரிவில்லை. இது தொடர்பில் இலங்கை அரசே கோரிக்கை விடுத்துள்ளது.

இரண்டு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால உறவை கருத்தில்கொண்டு இந்த கோரிக்கை குறித்து ஆராய்வதாக தாய்லாந்தின் வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவர் தனது டுவிட்டர் வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜதந்திர உரிமம் இருப்பதால் கோட்டாபய ராஜபக்ச விசாவுடன் 90 நாட்கள் தாய்லாந்தில் தங்கியிருக்க முடியும். 2013ஆம் ஆண்டு தாய்லாந்து மற்றும் இலங்கைக்கு இடையில் செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைக்கு அமைய குறித்த அனுமதி வழங்கப்படவுள்ளது – என தெரிவித்துள்ளார்.

இதேவேளை கோட்டாபய ராஜபக்ச நாளைய தினம் தாய்லாந்து நோக்கி செல்லவுள்ளார் என ரொய்டர் செய்தி சேவை செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version