அரசியல்
ராஜபக்சக்களுக்கு பயணத்தடை நீடிப்பு!
மஹிந்த ராஜபக்ச மற்றும் பசில் ராஜபக்ச ஆகியோருக்கு விதிக்கப்பட்ட பயணத்தடை செப்டம்பர் மாதம் 5 ஆம் திகதி வரை உயர் நீதிமன்றத்தால் நீடிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு காரணமானவர்களுக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிடுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட இரண்டு அடிப்படை உரிமை மனுக்களை இன்று இரண்டாவது நாளாக பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
You must be logged in to post a comment Login