அரசியல்

IMF ஜ நாடுவோர் முட்டாள்கள்!! – கூறுகிறார் வாசுதேவ

Published

on

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வாக சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என கூறுபவர்கள், முட்டாள்கள் என ஜனநாயக இடதுசாரி முன்னணியின் பொதுச் செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

1978ஆம் ஆண்டு முதல் தற்போது வரை நாட்டின் பொருளாதாரத்தை திரும்பிப் பார்க்கும் போது சர்வதேச நாணய நிதியத்தினால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சேதம் தெளிவாகத் தெரிகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ்வளவு அழிவை ஏற்படுத்திய சர்வதேச நாணய நிதியத்தினால் கடன் வழங்குவதற்கு நிபந்தனைகளை விதித்து இந்த நாட்டின் அழிவு மேலும் தொடரும் எனவும் அதற்கு ஜனநாயக இடதுசாரி முன்னணி ஆதரவு வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தாய்லாந்து, தைவான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகள் சர்வதேச நாணய நிதியத்தின் அடிப்படை நோக்கத்தை புரிந்து கொண்டதால் சர்வதேச நாணய நிதியம் வழங்கிய அறிவுறுத்தல்களை நிராகரித்தன.

இலங்கைக்கு கடன் வழங்குவதற்கு சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள நிபந்தனைகளுக்கு இணங்கும் அரசியல்வாதிகள், இறக்குமதி மற்றும் ஏற்றுமதியை சமநிலைப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும் எனவும் வாசு குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version