இலங்கை

இலங்கைக்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார்! – வாழ்த்துச் செய்தியில் ஐநா பொதுச் செயலாளர்

Published

on

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தலைமைத்துவம், இலங்கை எதிர்நோக்கியுள்ள தற்போதைய சவால்களை வெற்றிகொள்வதற்கு சாதகமான சூழலையும் ஸ்திரத்தன்மையையும் கட்டியெழுப்புவதற்கு மிகவும் முக்கியமானதாக அமையும்.

இந்த சவால்களை எதிர்கொள்வதற்கான தேசிய மூலோபாயத்தை வகுப்பதில் அனைத்து அரசியல் கட்சிகளிடையே ஒருமித்த கருத்தை எட்டுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தன்னை அர்ப்பணித்துள்ளார்.

இருப்பினும் இதற்கு. பொதுமக்களுடன் கலந்தாலோசித்தல், சட்டத்தின் ஆட்சி மற்றும் அடிப்படை மனித உரிமைக் கோட்பாடுகளுக்கு மதிப்பளித்தல் உட்பட அனைத்து தரப்பினருக்குமிடையில் கலந்துரையாடலை ஊக்குவிப்பது மிக அவசியம்.

இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் உடனடி மற்றும் நீண்டகாலத் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ஐக்கிய நாடுகள் சபை ஒத்துழைப்பு வழங்கத் தயாராக உள்ளது.

அனைத்து இலங்கையர்களுக்கும் சமாதானத்தைக் கட்டியெழுப்புதல், நிலையான அபிவிருத்தி மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல் ஆகியவற்றில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒத்துழைப்பை தொடர்ந்து பேணுவதற்கு எதிர்பார்க்கின்றோம் – என்று தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version