அரசியல்

ரணிலின் பதிவியேற்பு ஊக்கமளிக்கிறது – ஜப்பான் நம்பிக்கை

Published

on

இலங்கையின் புதிய ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஜப்பான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

ஜனாதிபதிக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ள ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா தனது வாழ்த்துச் செய்தியில்,

இலங்கையில் அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுவார்த்தைகள், கடன் மறுசீரமைப்பு செயல்முறை ஆகிய விடயங்களில் விரைவான முன்னேற்றம் ஏற்படும் என தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இலங்கையின் பொருளாதார அபிவிருத்தியை பல வருடங்களாக முன்னெடுத்துச் சென்ற ரணில் விக்ரமசிங்க இம்முறை ஜனாதிபதியாக பதவியேற்றுள்ளமை தமக்கு ஊக்கமளிப்பதாகவும் ஜப்பான் பிரதமர் தெரிவித்துள்ளார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version