இலங்கை
சீனக் கப்பல் விஜயம்! – இலங்கை அவசர கோரிக்கை
சர்ச்சைக்குரிய சீன ‘யுவான் வாங் 5’ கப்பலின் இலங்கைக்கான விஜயத்தை ஒத்திவைக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு சீன அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீன ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலான ‘யுவான் வாங் 5’ இலங்கை வருவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் இருந்து புறப்பட்டுள்ள ‘யுவான் வாங் 5’ ஒகஸ்ட் 11 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையவுள்ளது. இலங்கை வந்தடையும் கப்பல் நாட்டில் 17 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிடப்பட இருந்தது.
குறித்த கப்பலின் வருகை தொடர்பில் தனது கவலையை வெளியிட்டுள்ள இந்தியா, குறித்த சீனக் கப்பலின் வருகையானது பிராந்தியத்தின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.
கடந்த ஜூலை 13ஆம் திகதி சீனாவின் ஜியாங்யின் பகுதியில் இருந்து புறப்பட்ட கப்பல் தற்போது தைவானின் கடல் எல்லையை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
You must be logged in to post a comment Login