அரசியல்

ரணிலுடன் இணையோம்! – அநுர விடாப்பிடி

Published

on

” அரசியல் நோக்கம் கொண்ட, ரணிலின் சர்வக்கட்சி அரசியல் நாம் இணையமாட்டோம்.” – என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

ஜே.வி.பி. தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” குறுகிய காலப்பகுதிக்கே சர்வக்கட்சி அரசு அமைய வேண்டும் என பல தரப்பினரும் வலியுறுத்தியுள்ளனர். எனினும், சர்வக்கட்சி அரசின் கால எல்லை எவ்வளவு என்பதை ரணில் விக்கிரமசிங்க குறிப்பிடவில்லை.

நாடாளுமன்றம் கலைக்கப்படும்வரை அப்பதவியில் நீடிப்பதற்கு திட்டம் தீட்டுகின்றார். சர்வக்கட்சி அரசு என்பது ரணில் – ராஜபக்சக்களின் அரசியல் நிகழ்ச்சி நிரல் அந்த பொறிக்குள் சிக்க நாம் தயாரில்லை.” – எனவும் அநுரகுமார திஸாநாயக்க சுட்டிக்காட்டினார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version