இலங்கை

சீரற்ற காலநிலை – 12,289 பேர் பாதிப்பு

Published

on

மத்திய மாகாணம் உட்பட நான்கு மாகாணங்களில் நிலவும் சீரற்ற காலநிலையால் 3 ஆயிரத்து 37 குடும்பங்களைச் சேர்ந்த 12 ஆயிரத்து 289 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அடை மழையால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவால் மூவர் பலியாகியுள்ளனர். நால்வர் காணாமல்போயுள்ளனர். 326 வீடுகள் சேதமடைந்துள்ளன.

3 ஆயிரத்து 374 பேர் இடம்பெயர்ந்துள்ளனர். 15 பாதுகாப்பு மத்திய நிலையங்களில் அவர்கள் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

சீரற்ற காலநிலையால் மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கே கூடுதல் பாதிப்பு.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version