இலங்கை
பெரமுன உறுப்பினர் படுகொலை!
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
கொட்டிகாவத்த – முல்லேரியா பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இன்று இவ்வாறு சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் வந்த இருவர், துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.
கொல்லப்பட்டவர், ‘கராடி தம்மிக்க’ எனும் பாதாள குழு உறுப்பினர் ஒருவரின் உறவினரென விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இலங்கையில் அண்மைக்காலமாக துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் அதிகரித்துவருகின்றன. கடந்த நான்கு நாட்களுக்குள் மாத்திரம் ஐவர் கொல்லப்பட்டுள்ளனர்.
You must be logged in to post a comment Login