இலங்கை

இன்று முதல் கியூ.ஆர். முறைக்கு எரிபொருள்!

Published

on

இன்று (01) முதல் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்திரம் அல்லது கியூ.ஆர். முறையின் பிரகாரம் நாடு முழுவதும் எரிபொருள் விநியோகிக்கப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரை நடைமுறையில் உள்ள வாகன இறுதி இலக்கத்திற்கு எரிபொருள் விநியோகிக்கும் நடைமுறை, டோக்கன் முறை மற்றும் ஏனைய முறைமைகள் இன்று முதல் செல்லுபடியாகாதென அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அனைத்து முச்சக்கர வண்டிகளும், அந்தந்த பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதுடன், பொலிஸ் நிலையத்தினூடாக அவர்களுக்கு அருகிலுள்ள எரிபொருள் நிலையத்தை பரிந்துரைக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின்பிறப்பாக்கிகள்,தோட்டக்கருவிகள், இயந்திரங்கள் மற்றும் எரிபொருள் தேவைப்படும் பிற உபகரணங்களை பயன்படுத்துவோர் தேவையான எரிபொருள் வகை, வாரத்திற்கு தேவையான எரிபொருள் மற்றும் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் தெரிவு ஆகியவற்றை அந்ததந்த பிரதேச செயலகங்களில் பதிவு செய்யுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

நாடளாவிய ரீதியிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களிலிருந்து ஒவ்வொருவருக்குமான ஒதுக்கீட்டை பெறுவதற்கான சந்தர்ப்பம் வாரம் முழுவதும் கிடைக்கும். எனவே இன்றைய தினம் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஒன்று கூட வேண்டாம் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version