இந்தியா

எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை வருகிறது சீன ஆய்வுக் கப்பல்!

Published

on

சீன ஆய்வுக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன.

பிராந்தியத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் என கருதப்பட்ட நிலையில் குறித்த கப்பலின் வருகைக்கு இந்தியா எதிர்ப்பு தெரிவித்ததாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

வடமேற்கு இந்தியப் பெருங்கடல் பகுதியில் விண்வெளி செயற்கைக்கோள் நடவடிக்கைகளை கண்காணிக்க வரும் யுவான் வாங்-5 கப்பல் ஒகஸ்ட் 11ஆம் திகதி அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைய உள்ளது.

எரிபொருள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்வதற்காக குறித்த கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஒரு வாரத்திற்கு நங்கூரமிடப்பட உள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version