அரசியல்

ஜனாதிபதி ஆசனத்திலிருந்து ஜனாதிபதி கொடி, இலச்சினை அகற்றம்!

Published

on

நாடாளுமன்றத்தில் ஜனாதிபதிக்கு ஒதுக்கப்படும் விசேட ஆசனத்தில் இருக்கும் ஜனாதிபதி கொடி இலச்சினை முதல் முறையாக அகற்றப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக அந்த ஆசனத்தில் அரச இலச்சினையை பொருத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிங்கள வார இதழொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்றம் எதிர்வரும் 3 ஆம் திகதி கூடவுள்ளது. இதன்போது நாடாளுமன்றத்துக்கு தலைமைதாங்கி, ஜனாதிபதி கொள்கை விளக்க உரையாற்றவுள்ளார். சபாபீடத்தில் உள்ள ஆசனத்தில் அமர்ந்தே ஜனாதிபதி உரையாற்றுவார்.

அந்த ஆசனத்தில் இருக்கும் ஜனாதிபதி கொடி இலட்சியையே அகற்றப்படவுள்ளது.

ஜனாதிபதியை விளிக்கும்போது, இனி ‘அதிமேதகு’ என்ற வசனத்தை பயன்படுத்த வேண்டியதில்லை எனவும், ஜனாதிபதி கொடி இரத்து செய்யப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் அறிவிப்பு விடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version