இலங்கை
பாடசாலைகளுக்கு ஓகஸ்ட் விடுமுறை ரத்து!
பாடசாலைகளுக்கு வழங்கப்படும் ஓகஸ்ட் மாத விடுமுறை இம்முறை வழங்கப்பட மாட்டாது என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன்படி, எதிர்வரும் திங்கட்கிழமை முதல் நவம்பர் இறுதி வரை விடுமுறையின்றி பாடசாலைகளை நடத்த நடவடிக்கை எடுக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, 5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நவம்பர் 27 ஆம் திகதியும், உயர்தரப் பரீட்சை நவம்பர் 28 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையும் நடைபெறவுள்ளது.
You must be logged in to post a comment Login