அரசியல்

தேர்தலில் மொட்டுக்கே வெற்றி! – கூறுகிறார் சாகர காரியவசம்

Published

on

அடுத்த பொதுத்தேர்தலிலும் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியே வெற்றிபெறும் – என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” கோட்டாபய ராஜபக்ச இலங்கையர். அவர் நிச்சயம் நாடு திரும்புவார். சூழ்ச்சிமூலமே எமது தலைவர்கள் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டனர். இந்த உண்மையை மக்கள் புரிய ஆரம்பித்துள்ளனர். எதிர்காலத்தில் ஆதாரங்களுடன் அவை நிரூபனமாகும்.

அடுத்த தேர்தலிலும் எமது கட்சிக்கே பெரும்பான்மை பலம் கிடைக்கும்.” – எனவும் செயலாளர் குறிப்பிட்டார்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version