அரசியல்
ஜூன் 9 -கட்டிலில் படுத்திருந்தவருக்கும் வலை வீச்சு!
கடந்த ஜூன் மாதம் 9 ஆம் திகதி இடம்பெற்ற அரசுக்கெதிரான போராட்டத்தில் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றியிருந்தனர்.
இந்நிலையில், போராட்டக்காரர்களில் ஒருவர், ஜனாதிபதியின் கொடியை கழற்றி, அதனை அங்கிருந்த கட்டிலில் விரித்து, அதன் மேல் படுத்திருந்தார். அதனை வீடியோவாக ஒளிப்பதிவு செய்து சமூக வலைத்தளங்களிலும் பதவியேற்றியிருந்தார்.
அதுமட்டுமல்லாது அவர், ” நான் ஜனாதிபதியின் கொடியை, கட்டிலில் விரித்து படுத்து இருக்கின்றேன். எனக்கு கீழேயே கொடி இருக்கின்றது. ஆகையால், அவர் வீட்டுக்குப் போகவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.
காணொளி மூலம் அடையாளம் காணப்பட்ட குறித்த நபரையே பொலிஸார் தேடி வருகின்றனர்.
You must be logged in to post a comment Login