அரசியல்

அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசமைப்பு விரைவில்!

Published

on

புதிய அரசியலமைப்பை இறுதிப்படுத்துவதற்காக நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்று அமைக்கப்படும். அதன்மூலம் அனைவருக்கும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலான புதிய அரசமைப்பு இயற்றப்படும் – என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (28) உரையாற்றுகையிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.

அத்துடன், அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் அடுத்தவாரம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படும். அது நிறைவேறிய பின்னரே, புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்கான பணி முன்னெடுக்கப்படும் எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

அதேவேளை, புலம்பெயர் தமிழர்களும் இலங்கையர்களே, அவர்களுடன் பேச்சு நடத்துவதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

#SrilankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version