இலங்கை
மீண்டும் கட்டாயமாகிறது முகக்கவசம்!
முகக்கவசம் அணிவது இலங்கையில் மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருவதால், பொது இடங்கள், உள்ளக கூட்டங்கள் மற்றும் பொது போக்குவரத்து என்பவற்றின்போது முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா வைரஸ் கட்டுக்குள் வந்த நிலையில், முகக்கவசம் கட்டாயம் அணிய வேண்டும் என்ற நடைமுறை தளர்த்தப்பட்டது. அந்த நடைமுறை தற்போது மீள அமுல்படுத்தப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login