இலங்கை
இன்று முதல் QR குறியீட்டு முறைமையில் எரிபொருள்!
நாட்டில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரமான QR குறியீட்டு முறைமை இன்று முதல் அமுல்படுத்தப்படுகிறது.
இதனை மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மேலும், வாகன இலக்கத்தகட்டின் இறுதி இலக்கத்துக்கமைய எரிபொருள் வழங்கும் முறைமை எதிர்வரும் ஓகஸ்ட் முதலாம் திகதிவரை தொடரும். அதன் பிறகு முழுமையாக கியூ.ஆர். குறியீட்டு முறைமை மாத்திரம் அமுலாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
You must be logged in to post a comment Login