இந்தியா
இலங்கை விவகாரம்! – அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு
பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை விவகாரத்தில் இந்தியா தலையிட வேண்டும் என தமிழக எம்பிக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.
இதையடுத்து இலங்கையின் தற்போதைய சூழல் குறித்து விவாதிக்க நாளைமறுதினம் செவ்வாய்க்கிழமை அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய அரசு அழைப்பு விடுத்துள்ளதாக பாராளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.
இந்த கூட்டத்தில் இலங்கை பிரச்சனை மற்றும் மத்திய அரசின் உதவிகள் தொடர்பாக மத்திய அமைச்சர்கள் நிர்மலா சீதாராமன், எஸ் ஜெய்சங்கர் ஆகியோர் விளக்கம் அளிப்பார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவது தொடர்பாக இன்று காலை டெல்லியில் இடம்பெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்திலேயே மேற்படி தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
You must be logged in to post a comment Login