அரசியல்

சிங்கப்பூரிலிருந்து இந்தியாவுக்கு! – கோட்டாவின் கோரிக்கையை நிராகரித்தது இந்தியா

Published

on

இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச விடுத்த கோரிக்கையை ஏற்க இந்தியா மறுத்துவிட்டது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நாட்டில், மிகப்பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்ட நிலையில் கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசை பதவி விலகக் கோரி நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்தன.

தொடர் போராட்டங்கள் இடம்பெற்ற நிலையில், கடந்த 9 ஆம் திகதி மிகப்பெரும் மக்கள் போராட்டம் வெடித்தது. இந்த நிலையில், இரவோடு இரவாக மாலைதீவு சென்ற கோட்டாபய ராஜபக்ச அங்கிருந்து சிங்கப்பூர் சென்றார்.

இருப்பினும் அங்கு அவருக்கு புகலிடம் வழங்கப்படவில்லை எனவும், சாதாரண மக்களுக்கு வழங்கப்படுவது போல் 15 நாட்கள் தங்குவதற்கான சாதாரண விசாவே வழங்கப்பட்டுள்ளது எனவும் சிங்கப்பூர் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், தற்போது கோட்டாபய இந்தியா செல்வதற்கான அனுமதியை வழங்கக் கோரி இந்திய அரசிடம் கோரிக்கை முன்வைத்துள்ளார் எனவும், அந்தக் கோரிக்கையை இந்திய அரசு மறுத்துள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#India #SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version