இலங்கை

யாழில் 10 இலட்சம் வழிப்பறி!

Published

on

தொழிலில் முதலீடு செய்வதற்காக ஆலயத்தில் பூஜையில் வைத்து எடுத்த 10 இலட்ச ரூபா பணத்தினை இருவர் வழிப்பறி கொள்ளையடித்து தப்பி சென்றுள்ளனர்.

யாழ்ப்பாணம் கோட்டை முனியப்பர் ஆலயம் முன்பாக நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்ற சம்பவம் குறித்து தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தை சேர்ந்த நபர் ஒருவர் தான் புதிதாக தொடங்கவிருந்த தொழில் முயற்சிக்கு முதலீடு செய்வதற்கான 10 இலட்ச ரூபாய் பணத்தினை முனியப்பர் ஆலயத்தில் பூஜையில் வைத்து எடுத்து தருமாறு பூசகரிடம் கொடுத்துள்ளார்.

பூசகரும் அவரின் வேண்டுதலின் பிரகாரம் அந்த பணத்தினை பூஜையில் வைத்து எடுத்துக்கொடுத்துள்ளார்.

பூஜையில் வைத்து எடுத்த பணத்தினை பூசகரிடம் வாங்கிக்கொண்டு ஆலயத்திற்கு வெளியில் வருவதற்கு இடையில் அங்கு நின்றிருந்த இருவர் அப்பணத்தினை பறித்துக்கொண்டு அவ்விடத்தில் இருந்து தப்பி ஓடியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version