அரசியல்
ஜனாதிபதி இன்று பதவி விலகுவது உறுதி – 20 ஆம் திகதி இடைக்கால ஜனாதிபதி தெரிவு!
“ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, இன்று பதவி விலகுவது உறுதி. இது தொடர்பான பதவி துறப்பு கடிதத்தை இன்றைய தினத்துக்குள் எனக்கு அனுப்பி வைப்பதாக சற்று நேரத்துக்கு முன்னர், அவர் என்னிடம் தெரிவித்தார்.
எனவே, இடைக்கால ஜனாதிபதி தேர்வு 20 ஆம் திகதி நடைபெறும். இதில் சந்தேகம் கொள்ள வேண்டாம். அமைதியாக செயற்படுமாறு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.”
இவ்வாறு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சற்று நேரத்துக்கு முன்னர் அறிவித்தார்.
You must be logged in to post a comment Login