அரசியல்

அடுத்த வாரம் புதிய ஜனாதிபதி! – ரணில் தெரிவிப்பு

Published

on

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்று பதவி விலகியதும் அடுத்த வாரம் புதிய ஜனாதிபதியை நியமிக்க கட்சித் தலைவர்கள் ஏற்கனவே இணங்கியுள்ளதாக பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜனநாயக விரோத சக்திகள் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கு இடமளிக்க முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்

மேலும் பாதுகாப்பு பிரிவில் இருந்து தமக்குக் கிடைத்த ஆலோசனையின் அடிப்படையிலேயே மேல் மாகாணத்தில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, நாடு முழுவதும் அவசரகாலச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. என தெரிவித்துள்ளார். நாடாளுமன்றம் வெள்ளிக்கிழமை கூடும் எனவும் அவர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#SriLanakNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version