இந்தியா

வவுனியாவைச் சேர்ந்த 6 பேர் தமிழகத்தில் தஞ்சம்!

Published

on

இலங்கையில் இருந்து தமிழகத்துக்கு அகதிகளாக செல்பவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது.

இந்தநிலையில் நேற்று இரவு 8 மணியளவில் இலங்கை தலைமன்னாரில் இருந்து வவுனியா பறையான்குளத்தைச் சேர்ந்த பாலசுகந்தன் (வயது 41), அவரது மனைவி அனுஜா (35), மகன்கள் பிரசன்னா (10), மேகலட்சன் (8) மற்றும் வவுனியா நெலுங்குளத்தைச் சேர்ந்த லிங்கேஸ்வரன் (38), அவரது மனைவி பிரதாம்பிகை (37) ஆகிய 6 பேரும் தமிழகத்தின் இராமேஸ்வரம் சென்றடைந்துள்ளனர்.

படகொன்றில் இராமேஸ்வரம் சென்றடைந்த இவர்கள் படகுக்கு 4 லட்சம் ரூபா வழங்கியுள்ளனர்.

அந்த படகு தனுஷ்கோடி அருகே உள்ள அரிச்சல்முனை 1-ம் மணல் தீடையில் இவர்கள் 6 பேரையும் இறக்கிவிட்டு சென்றுள்ளது. நள்ளிரவில் மணல் தீடையில் தவித்த அவர்களை அந்த வழியாக சென்ற இராமேஸ்வரம் மீனவர்கள் அவதானித்துள்ளனர்.

இது தொடர்பில் இந்திய கடற்படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே விரைந்து சென்ற இந்திய கடற்படைக்கு சொந்தமான விரைவு படகு மூலம் அவர்கள் 6 பேரும் மீட்கப்பட்டு கடலோர பாதுகாப்பு படையிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

விசாரணைக்கு பிறகு மண்டபம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்கள் அகதிகள் முகாமில் தங்க வைக்கபட்டுள்ளனர்.

#SriLankaNews

You must be logged in to post a comment Login

Leave a Reply

மறுமொழியை நிராகரி

Exit mobile version